Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா உயில் எழுதியிருக்க வாய்ப்பில்லை - ஞானி பகிரும் தகவல்

ஜெயலலிதா உயில் எழுதியிருக்க வாய்ப்பில்லை - ஞானி பகிரும் தகவல்
, வியாழன், 8 டிசம்பர் 2016 (13:46 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து, அவரின் சொத்துக்கள் யாருக்கு செல்கிறது என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப்படுகிறது.


 

 
இந்நிலையில், பிரபல மூத்த பத்திரிக்கையாளரான ஞானி தனது முகநூல் பகக்த்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
“ஜெயலலிதா உயில் எழுதியிருந்தால அந்த உயிலைக் கடந்த எழுபது நாட்களில் எழுதியிருக்க வாய்ப்பில்லை.
 
காரணம், அவருக்கு சிகிச்சை அளித்த நர்சுகளிடம் எல்லாம் வீட்டுக்கு வந்தால் நல்ல டீ தருகிறேன்; கோட்டைக்கு அழைத்துப் போய்க் காட்டுகிறேன் என்றெல்லாம் பேசினார் என்று அந்த நர்ஸ்கள் இரங்கல் நிகழ்ச்சியில் கூறியதுதான். 
 
வீடு திரும்புவது பற்றி அவ்வளவு உறுதியான மனநிலையில் மருத்துவமனையில் இருப்பவர் ஏன் அங்கே உயில் எழுதப் போகிறார்? 
 
எனவே ஏதாவது உயில் இருந்தால் அது முன்னரே எழுதப்பட்டதாக இருந்தால்தான் அதற்கான நம்பகத்தன்மை இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலா புஷ்பாவுக்கு நேர்ந்தது என்ன?