Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? அபிராமி ராமநாதன்

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (13:08 IST)
திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம், இலவச பார்க்கிங், கேண்டீன்களில் விற்கப்படும் பொருட்களை எம்.ஆர்.,பியில் விற்க வேண்டும், அம்மா குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என்பது உள்பட சில விஷயங்களை நேற்று விஷால் தெரிவித்தார்



 
 
இந்த நிலையில் இதுகுறித்து அதிருப்தி அடைந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய திரையரங்கு உரிமையாளர் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறியபோது, 'எங்களுக்கு கட்டளையிட விஷால் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்
 
விஷால் கூறும் கருத்துக்கள் சரியானவை என்றாலும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல் விஷால் பேசுகிறார்; யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது என்பதை அவர் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார். 
 
மேலும் 16 ஆண்டுகளுக்கு பின் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ராமநாதன், கட்டண உயர்வுக்கு அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்த நிலையிலும், முதல்வர் ஈபிஎஸ், அமைச்சர்கள் வேலுமணி, கடம்பூர் ராஜூ எங்கள் பிரச்சனைகளை நீக்கினர் என்றும் அவர்களுக்கு எங்களது நன்றி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments