Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: போட்டியிட வேட்பாளர் கிடைக்காமல் பாஜக திணறல்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (12:42 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டது. திமுகவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும், அதிமுகவுக்கு அகில இந்திய தேசிய லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவை போக தினகரன் மற்றும் தீபா ஆகியோர்களும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
 
மேலும் தே.மு.தி.க. தமிழ் மாநில காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் பாஜகவும் பிரபலம் ஒருவரை வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்தது. ஆனால் வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் மூன்று நாட்களே மீதமுள்ள நிலையில் இன்னும் வேட்பாளரையே அறிவிக்காமல் அந்த கட்சி உள்ளது.
 
கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரனும், தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் போட்டியிட மறுத்துவிட்டதால் யாரை நிறுத்துவது என்று புரியாமல் பாஜக திணறுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments