Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்? ஊர் முழுவதும் போஸ்டர் அடிக்கும் அதிமுக!

Prasanth Karthick
வியாழன், 27 மார்ச் 2025 (11:11 IST)

டாஸ்மாக் ஊழல் குறித்து அதிமுகவினர் பல பகுதிகளில் ஒட்டி வரும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

சமீபத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நிலையில் ரூ1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.
 

ALSO READ: தமிழகத்தில் இருந்து குழந்தை கடத்தி செல்லும் கும்பல்.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது..!
 

இந்நிலையில் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அதை வைத்து போராட்டங்கள் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

 

அதை தொடர்ந்து தற்போது அதிமுகவினர் இந்த பிரச்சினையை முக்கிய பிரச்சினையாக கையில் எடுத்துள்ளனர். தற்போது பல பகுதிகளில் அதிமுகவினர் “1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?” என கேட்டு போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். தேர்தல் நெருங்க நெருங்க இந்த டாஸ்மாக் ஊழல் விவகாரம் விஸ்வரூபமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments