Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலீட்டாளர் மாநாடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

முதலீட்டாளர் மாநாடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

முதலீட்டாளர் மாநாடு: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை
, வியாழன், 23 ஜூன் 2016 (13:20 IST)
தமிழகத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாடு குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
 

 
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசுகையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
 
இதற்கு, அமைச்சர் சம்பத் பதில் அளித்தார். அவர் கூறுகையில், 98 ஒப்பந்தங்களில் 60 ஒப்பந்தங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளது. மேலும், 7 ஒப்பந்தங்களின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 48 ஆயிரத்து 148 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
ஆனால், இந்த ஒப்பந்தம் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த  நன்மை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுக்க, அதற்கு அவசியமே இல்லை என அமைச்சர் ஒரே போடாக போட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோற்றுவிடுவோம் என்று அதிமுகவிற்கு பயம் வந்துவிட்டது - ராமதாஸ் தாக்கு