Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேந்தர் மூவிஸ் மதன் எங்கே? காவல்துறையிடம் கதறிய தாய்

வேந்தர் மூவிஸ் மதன் எங்கே? காவல்துறையிடம் கதறிய தாய்

வேந்தர் மூவிஸ் மதன் எங்கே? காவல்துறையிடம் கதறிய தாய்
, வியாழன், 9 ஜூன் 2016 (14:29 IST)
திரைப்பட அதிபர் வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்து தரக்கோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது தாயார் கண்ணீர் மனு அளித்துள்ளார்.
 

 
எஸ்ஆர்எம் கல்லூரி நிர்வாகத்திற்கும், வேந்தர் மூவிஸ் மதன் இடையே மருத்துவப்படிப்பு தொடர்பாக பல கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனையில் கருத்து வேறுபாடு எழுந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால், கடந்த மாதம் 27 ஆம் தேதி, கங்கையில் சமாதி ஆகப்போவதாக கூறி, கடிதம் எழுதி வைத்துவிட்டு வேந்தர் மூவிஸ் மதன் மாயமானார். இதனால் அவரை கண்டுபிடித்துதரக் கோரி அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோர் காவல்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்தனர்.
 
மேலும், வேந்தர் மூவிஸ் மதன் பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 55 புகார் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில், வேந்தர் மூவிஸ் மதனை கண்டுபிடித்து தரக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவரது தாயார் மீண்டும் கண்ணீரோடு மனு அளித்தார்.
 
வேந்தர் மூவிஸ் மதன் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடுகள் மிகவும் மர்மமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜெ. ஆட்சியில் தரகர்களாக இருக்கும் அதிகாரிகளுக்கு தான் மரியாதை’ - ராமதாஸ்