Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்போது பட்டாசு வெடிக்கலாம்? தமிழக அரசின் புது அறிவிப்பு!!!

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (10:32 IST)
தீபாவளியன்று மக்கள் எப்போது பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் இரவு 11.55 மணி முதல் 12.30 மணி வரை  மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்ததையடுத்து தீபாவளியன்று அதிகாலை காலை 4 - 5 மணி முதலும், இரவு 9-10 மணி முதலும் பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றமே நேரத்தை அறிவித்தது.
 
இந்நிலையில் தற்பொழுது தமிழக அரசு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments