Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் எப்போது சென்னைக்கு வருவார்? உண்மையை உடைத்த சுதீஷ்

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (11:36 IST)
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் எப்பொழுது சென்னைக்கு திரும்புகிறார் என்பது குறித்து தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன.
 
தமிழத்தில் திமுக காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் மதிமுக ஒரு அணியாவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்து மற்றொரு அணியாக போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இதில் அதிமுக பாஜக கூட்டணி ஏறக்குறைய அறிவிக்கபடாத ஒன்றாக உள்ளது. 
 
இந்நிலையில் அதிமுக மற்றும் மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 
இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் பேசுகையில்,  அமெரிக்காவில் இருக்கும் தலைவர் விஜயகாந்த் இன்னும் இரண்டு வாரங்களில் சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்புகிறார்.
 
கேப்டன் அவர்கள் சென்னைக்கு திரும்பியதும், அவருடன் கலந்தாலோசித்து, கூட்டணி குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments