அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஓடியதால் பேருந்து தரையில் உரசி தீப்பொறி கக்கியபடி விபத்து!

J.Durai
வியாழன், 18 ஜூலை 2024 (11:34 IST)
சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காக  புறப்பட்ட அரசு பேருந்து  வரும் பாதையில் பேருந்து பழுதானதால் பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்தனர். 
 
பின்னர் பேருந்தில் ஓட்டுனர் ராஜாவும், நடத்துனர் மாயக்கண்ணனும் பழுதடைந்த பேருந்தினை ஈரோடு பணிமனைக்கு கொண்டு செல்வதற்காக வந்த பொழுது, பேருந்து குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான, சிவசக்தி நகர் அருகே வந்து கொண்டிருந்த பொழுது, பேருந்தின் முன் சக்கரம் கழன்று சென்று அருகில் இருந்த கடைக்குள் விழுந்தது. 
 
இதில் யாருக்கும்  எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், பேருந்தின் முன்சக்கரம் கழன்றதால், பேருந்து தார் சாலையில் மோதி தீப்பொறி கக்கியபடி வேகமாக வந்தது. 
 
பேருந்தின் ஓட்டுநர் ராஜா சாமர்த்தியமாக வாகனத்தை சாலையின் ஓரமாக திருப்பி நிறுத்தியதில் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
 
மேலும் இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெயரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments