ஐயப்ப விரதத்தில் தடங்கல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? - புதிய மேல்சாந்தி அறிவுரை!

Prasanth Karthick
புதன், 13 நவம்பர் 2024 (09:22 IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு புதிய மேல்சாந்தி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

 

 

சபரிமலையில் மகரவிளக்கு சீசன் தொடங்க உள்ள நிலையில் கார்த்திகை மாத தொடக்கத்தில் பக்தர்கள் பலரும் சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்குவது வழக்கம். ஒரு மண்டலம், அதாவது 41 நாட்கள் விரதத்திற்கு பிறகு சபரிமலைக்கு இருமுடிக் கட்டி சென்று ஐயப்பனை வழிபடுவார்கள்.

 

மகர விளக்கு சீசன் கார்த்திகை 1 (நவம்பர் 16) தொடங்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான சபரிமலை மேல்சாந்தியாக கொல்லம் அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கொல்லம் மகாலட்சுமி தேவி கோவில் மேல்சாந்தியாக சேவை செய்து வருகிறார்.
 

ALSO READ: இந்த ராசிக்காரர்கள் எதிலும் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது!– இன்றைய ராசி பலன்கள்(13.11.2024)!
 

சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் அவர் “பிரம்மச்சாரியான சுவாமி ஐயப்பனை தரிசிக்க 41 நாட்கள் பிரம்மச்சர்ய விரதத்தை கடைப்பிடிப்பது சிறந்தது. 41 நாட்கள் விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் பயபக்தியுடன் விரதம் மேற்கொள்ளலாம்.

 

விரதம் மேற்கொள்ளும் நாட்களில் வீட்டில் துக்க சம்பவங்கள் நடந்தால் சாமி தரிசனத்தை ஒத்தி வைக்க தேவையில்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் மாலையை கழற்றிவிட்டு, மீண்டும் மாலையை முறைபடி அணிந்து விரதம் மேற்கொள்ளலாம். இதனால் தெய்வ கோபம், தீட்டு ஏற்படாது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments