Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?: அறிக்கையே வெளியிடாத அப்பல்லோ!

6 நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?: அறிக்கையே வெளியிடாத அப்பல்லோ!

6 நாட்களாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?: அறிக்கையே வெளியிடாத அப்பல்லோ!
, திங்கள், 17 அக்டோபர் 2016 (10:41 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலைகுறித்து அப்பப்போது அறிக்கை வெளியிட்டு வந்த அப்பல்லோ நிர்வாகம் கடந்த 6 நாட்களாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.


 
 
காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து அவரது உடல் நிலைகுறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு அறிக்கைகள் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகள் முதல்வரின் உடல்நிலை குறித்து ஓரளவுக்கு தகவல்களை பொதுமக்களுக்கு அளித்தது. இறுதியாக வந்த அறிக்கையில் முதல்வருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
 
கடைசியாக கடந்த 10-ஆம் தேதி முதல்வரின் உடல் நிலைகுறித்து அறிக்கை வெளியிட்டது அப்பல்லோ மருத்துவமனை. 6 நாட்களாக முதல்வர் எப்படி இருக்கிறார் என்ற எந்த தகவலையும் வெளியிடவில்லை மருத்துவமனை. இதனையடுத்து முதல்வரின் உடல் நிலை குறித்து மீண்டும் மருத்துவமனை தரப்போ, அரசு தரப்போ அறிக்கை வெளியிட்டு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாட்டிலில் சுய இன்பம் செய்ததால் ஆணுறுப்பையே நீக்கிய விபரீதம்!