Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

Prasanth Karthick
செவ்வாய், 20 மே 2025 (12:32 IST)

தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. ஆப்பிள் ஐஃபோன்களுக்கான உதிரி பாகங்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில் பல்வேறு பகுதிகளில் அவை அசெம்பிள் செய்யப்படுகின்றன. அப்படியாக தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனம் ஐஃபோன் உற்பத்தியை செய்து வருகிறது.

 

சமீபத்தில் சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக சண்டை ஏற்பட்டபோது சீனாவின் அதிகரித்த வரிவிதிப்புகளால் சீனாவில் உள்ள ஐஃபோன் தயாரிப்பு ஆலையை இந்தியாவிற்கு மாற்றலாமா என ஆப்பிள் நிறுவனம் யோசித்த நிலையில், இந்தியாவில் தொடங்குவதற்கு பதிலாக அதை அமெரிக்காவிலேயே தொடங்கலாமே என அதிபர் ட்ரம்ப் முட்டுக்கட்டை போட்டார்.

 

ஆனால் சீனாவிலோ, இந்தியாவிலோ கிடைக்கும் அளவிற்கு வேலையாட்கள் அமெரிக்காவில் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து ஐஃபோன் உற்பத்தி செய்வதை அதிகரிக்க உள்ளது பாக்ஸ்கான் நிறுவனம்

 

தமிழ்நாட்டிலிருந்து ஐஃபோன் உற்பத்தியில் ஈடுபடுவதால் பாக்ஸ்கான் நிறுவனத்தின் வருவாய் 2 மடங்கு அதிகரித்து ரூ.1.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும், அதனால் முதலீட்டை அதிகரித்து உற்பத்தியையும் அதிகரிக்க மேலும் ரூ.12,800 கோடியை பாக்ஸ்கான் முதலீடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

நீட் பொய்: ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா? ஈபிஎஸ் கேள்வி..!

மீண்டும் ஒரு புல்டோசர் நடவடிக்கை.. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை தரைமட்டம் ஆக்கிய 50 ஜேசிபிக்கள்

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments