Webdunia - Bharat's app for daily news and videos

Install App

21 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை: தமிழ்நாடு வெதர்மேன்

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (15:57 IST)
சென்னையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்மஸ் தினத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்
 
 வரும் டிசம்பர் 25ஆம் தேதி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூலில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 20 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும், அதனை அடுத்து தற்போது தான் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
2001ஆம் ஆண்டில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்தது என்றும் 20 ஆண்டுகள் கழித்து தற்போது தான் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை பெய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments