Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 17 நவம்பர் 2024 (14:13 IST)
தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தட்பவெப்ப நிலை குளிர்ச்சியாக மாறி உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து, இருந்த நிலையில் சென்னை உள்பட அதன் சுற்றுப்புற பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை இல்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் இன்று மாலை நான்கு மணி வரை 16 மாவட்டங்களில் வீடு மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திருச்சி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், இந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments