Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிற்பகல் 1 மணி வரை சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: வானிலை அறிவிப்பு.!

Mahendran
புதன், 18 டிசம்பர் 2024 (11:01 IST)
சென்னை மற்றும் சென்னையில் சுற்றி உள்ள மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யும் என்றும், குறிப்பாக தமிழக கடற்கரை ஓர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரையும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்பதால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments