Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-ஆம் கட்ட பிரச்சாரம் நாளை முதல் தொடங்குகிறோம்- அமைச்சர் உதயநிதி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (22:03 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி  மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், 5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குவதாக  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
’’மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, INDIA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 23- ஆம் தேதி தொடங்கி, 4 கட்ட பிரச்சார பயணங்களை முடித்துள்ளோம்.
 
5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குகிறோம்.
 
அடுத்த 3 தினங்கள், குமரி,  நெல்லை, தென்காசி மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளோம்.
 
அனைவரும் ஓரணியில் நின்று பாசிசத்தை வீழ்த்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments