Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5-ஆம் கட்ட பிரச்சாரம் நாளை முதல் தொடங்குகிறோம்- அமைச்சர் உதயநிதி

SInoj
புதன், 10 ஏப்ரல் 2024 (22:03 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி  மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரசாரம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில், 5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குவதாக  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
’’மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, INDIA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 23- ஆம் தேதி தொடங்கி, 4 கட்ட பிரச்சார பயணங்களை முடித்துள்ளோம்.
 
5-ஆம் கட்ட பிரச்சாரத்தை தென் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் நாளை தொடங்குகிறோம்.
 
அடுத்த 3 தினங்கள், குமரி,  நெல்லை, தென்காசி மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழகம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளோம்.
 
அனைவரும் ஓரணியில் நின்று பாசிசத்தை வீழ்த்துவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்.. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!

நாளை குடமுழுக்கு விழா.. இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி: அமைச்சர் சேகர்பாபு

அமெரிக்க அரசியலில் புதிய அத்தியாயம்: 'அமெரிக்கா கட்சி' உதயம் - டிரம்ப்புக்கு எதிராக களமிறங்கும் எலான்

அடுத்த கட்டுரையில்
Show comments