Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்-அமைச்சர் அன்பில் மகேஷ்

Sinoj
சனி, 16 மார்ச் 2024 (14:58 IST)
புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான   பாஜக ஆட்சி நடந்து வருகிறது.   இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசின் தேசியக் கல்விக் கொள்கியயை தமிழ் நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறி வரும் நிலையில், வரும் 2024 -2025 கல்வியாண்டு முதல் PM SHRI பள்ளித்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
 
இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ''தமிழ்நாட்டில் PM SHRI பள்ளிகள் அமைப்பது தொடர்பான குழுவை உருவாக்கியுள்ளோம்.

இதனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தமாகாது. புதிய கல்விக்கொள்கை தமிழ்நாடு அரசு என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாது என்பதை நான் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். 

பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதான் எங்களுடைய எண்ணம், அதை நோக்கித்தான் நாங்கள் செயல்படுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments