Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பிரபாகரன் வழியில் நாங்கள் வந்திருக்கிறோம்' - சீமான்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (10:57 IST)
தலைவர் பிரபாகரன் வழியில் நாங்கள் வந்திருக்கிறோம். இதற்காக நாங்கள் செத்தாவது எங்களது இனத்தை வாழ வைப்போம் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
 

 
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கணேசனை ஆதரித்து, திண்டுக்கல் நாகல் நகரில் பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், “50 ஆண்டு காலமாக ஆட்சி மாறி வருகிறதே தவிர, ஆள் மாறவில்லை. அதை மாற்றத்தான் வந்திருக்கிறோம். காமராஜர் ஆட்சியில் வளர்ந்த வளர்ச்சியில் ஒரு பகுதி கூட இப்போது இல்லை.
 
தலைவர் பிரபாகரன் வழியில் நாங்கள் வந்திருக்கிறோம். இதற்காக நாங்கள் செத்தாவது எங்களது இனத்தை வாழ வைப்போம். அரிசி, உணவு, வீடு இதற்கெல்லாம் மாற்றம் கொண்டு வருவோம், நல்ல குடிநீர், மருத்துவம் தரமாக கொடுக்க வழி செய்வோம். வள்ளுவர் படிக்கவில்லை. அவர் எழுதிய குறள் பல்கலைக்கழகங்களில் பாடமாக இருக்கிறது.
 
படிக்காத காமராஜர், இளையராஜா, சிவாஜி ஆகியோர் படிக்காமக் கூட இன்றளவும் அவர்களுடைய திறமைகள் பேசப்பட்டு வருகிறது. ரகுமான், தெண்டுக்கர் ஆகியோர் அந்த ஆர்வத்துடன் வந்தவர்கள். பிள்ளைகளை அவரவர் விருப்பத்திறகு விட்டுவிட்டாலே நாடு முன்னேறும்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்.....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments