Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களின் எதிரி யார் என்றே தெரியவில்லை: டி.கே.எஸ் இளங்கோவன்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (21:08 IST)
தேர்தல் களத்தில் எங்கள் எதிரி யார்? என்றே தெரியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் திமுகவின் வலிமையான எதிரி யார்? என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ் இளங்கோவன், 'எங்களின் வலிமையான எதிரியாக அதிமுக தான் இருந்தது. ஆனால் தற்போது அதிமுக தொண்டர்கள் எந்த தலைவர் பக்கம் இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. தினகரனின் பக்கமும் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் இருப்பதால் எங்களின் எதிரி யார்? என்றே எங்களுக்கே  சரியாக தெரியவில்லை. ஒரு தேர்தல் முடிந்தால்தான் இந்த ஐயத்திற்கு விடை கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் பாஜகவுக்கு எதிரான கொள்கையை திமுக எடுத்து வருகிறது என்றாலும் தேர்தல் களத்தில் எங்களின் போட்டியாளராக பாஜக இல்லை என்றும், தொண்டர்கள் இருக்கும் அதிமுகவே தங்களுக்கு வலிமையான எதிரியாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments