Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களின் எதிரி யார் என்றே தெரியவில்லை: டி.கே.எஸ் இளங்கோவன்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (21:08 IST)
தேர்தல் களத்தில் எங்கள் எதிரி யார்? என்றே தெரியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என திமுக அமைப்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் களத்தில் திமுகவின் வலிமையான எதிரி யார்? என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ் இளங்கோவன், 'எங்களின் வலிமையான எதிரியாக அதிமுக தான் இருந்தது. ஆனால் தற்போது அதிமுக தொண்டர்கள் எந்த தலைவர் பக்கம் இருக்கின்றார்கள் என்றே தெரியவில்லை. தினகரனின் பக்கமும் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் இருப்பதால் எங்களின் எதிரி யார்? என்றே எங்களுக்கே  சரியாக தெரியவில்லை. ஒரு தேர்தல் முடிந்தால்தான் இந்த ஐயத்திற்கு விடை கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் பாஜகவுக்கு எதிரான கொள்கையை திமுக எடுத்து வருகிறது என்றாலும் தேர்தல் களத்தில் எங்களின் போட்டியாளராக பாஜக இல்லை என்றும், தொண்டர்கள் இருக்கும் அதிமுகவே தங்களுக்கு வலிமையான எதிரியாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments