Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம்..! இரட்டை இலை சின்னம் உறுதியாக கிடைக்கும்..! ஓபிஎஸ்.

Senthil Velan
வியாழன், 1 பிப்ரவரி 2024 (13:03 IST)
மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
 
முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் என அதிமுக பிளவுபட்டு இருக்கிறது.
 
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ALSO READ: ஜூலையில் நாங்களே முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்வோம்...! பாஜக எம்பிக்கள் கைதட்டி ஆரவாரம்
 
தற்போது பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிக்கு ரூ.1.10 கோடி.. ப்ரீத்தி ஜிந்தாவின் மனித நேயம்..!

45 வயது பெண்மணி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. பிறப்பு உறுப்பில் இரும்புக்கம்பிகள்..!

இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ரூ.4500 கோடி இழப்பு.. இந்தியாவின் இழப்பு எவ்வளவு?

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments