Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 125 அடியை எட்டியது

Webdunia
சனி, 9 ஆகஸ்ட் 2014 (16:03 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பொழிந்து வருகிறது. இதனால் கடந்த மாதம் 112 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 124.20 அடியாக உயர்ந்தது. இன்று இரவுக்குள் 125 அடி நீர்மட்டம் வந்துவிடும்.
 
நேற்று அணைக்கு 1539 கனஅடி நீர்வந்தது. இன்று 2246-ஆக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1311 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் வைகை அணையை வந்து சேருகிறது. எனவே வைகை அணையின் நீர்மட்டம் 44.36 அடியாக கூடியுள்ளது. அணைக்கு 1039 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்குகாக 40 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
 
இதேபோல மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 29.85 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 47.88 அடியாகவும் உள்ளது.
 
நேற்று பெய்த மழையளவு வருமாறு:-
 
பெரியாறு 34.8 மி.மீ, தேக்கடி 10.6 மி.மீ, கூடலூர் 3 மி.மீ, உத்தமபாளையம் 10 மி.மீ, மஞ்சளாறு 7 மி.மீ, சோத்துப்பாறை அணை 3 மி.மீ தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

மனைவியை குழி தோண்டி புதைத்த கணவர்.! வீடியோ கால் பேசியதால் கொலை.!!

நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்ய வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதா

பாலியல் புகார்..!மருத்துவமனைக்குள் சென்ற காவல் வாகனம்..! நோயாளிகள் அதிர்ச்சி..!!

Show comments