Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரம்பாக்கத்தை தொடர்ந்து புழல் ஏரி திறக்கப்படுகிறது!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (11:47 IST)
புழல் ஏரிக்கு அதிக தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
பருவமழை, நிவர் புயல் தற்போது புரெவி புயல் ஆகியவற்றால் தமிழகத்திற்கு அதிக மழை பொழிந்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் செம்பரம்பாக்கம் நிரம்பியதை தொடர்ந்து புழல் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. 21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 20 அடிக்கு நீர் உள்ளது. 
 
புழல் ஏரிக்கு வினாடிக்கு 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி புழல் ஏரி இன்று பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக வினாடிக்கு 500 கன அடி நீர் புழல் ஏரி திறக்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நல்லக்கண்ணு தவறி விழுந்து காயம்.. தொலைபேசி வழியாக உடல்நிலையை விசாரித்த விஜய்..!

கொடைநாட்டிலே நின்றபோது மிஸஸ் ஜெயலலிதா என அழைத்திருப்பீர்களா? விஜய்க்கு சரத்குமார் கேள்வி..!

விஜயகாந்த் இடத்தை விஜய் நிரப்புவார்: தாடி பாலாஜி பேட்டி..!

2வது மனைவியின் பிரசவத்தின் போது முதல் மனைவியிடம் சிக்கிய நபர்! மனித வளத்துறையில் புகார்..!

பிரத்தியேக செயலியுடன் போலீசாருக்கு செல்போன்கள்: கோவை மாநகரக் காவல் துறை!

அடுத்த கட்டுரையில்
Show comments