Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏரிகளில் வேகமாக சரியும் நீர்மட்டம்.. பெங்களூர் போல் ஆகுமா சென்னை?

Mahendran
திங்கள், 22 ஏப்ரல் 2024 (11:12 IST)
சென்னையின் நீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகளில் மிக வேகமாக நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் இதனால் பெங்களூர் போல் சென்னையில் தண்ணீர் கஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் 1.5 சதவீதம் வரை ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளதாகவும் 2015 ஆம் ஆண்டு போல் 2023 ஆம் ஆண்டு பெருமழை பெய்தும் ஏரிகள் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் கஷ்டம் தலைவிரித்தாடி வரும் நிலையில் தொடர்ந்து சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் அச்சத்துடன் எழுந்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments