வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 7 ஏப்ரல் 2025 (10:57 IST)
வாணியம்பாடி பள்ளி காவலாளியாக இருந்தவர், ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பார் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் காவலாளியாக இர்பான் என்பவர் பணியாற்றி வந்தார்.
 
இன்று காலை வழக்கம் போல அவர் பள்ளிக்கு தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து, திடீரென வழிமறித்து கத்தியால் குத்தினர்.
 
இதனை அடுத்து, அவர் உயிர் தப்பிக்க ஓடிய நிலையில், ஓட ஓட விரட்டிய மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனால் இர்பான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments