Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

Mahendran
திங்கள், 7 ஏப்ரல் 2025 (10:57 IST)
வாணியம்பாடி பள்ளி காவலாளியாக இருந்தவர், ஓட ஓட மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இக்பார் சாலையில் உள்ள தனியார் பள்ளியின் காவலாளியாக இர்பான் என்பவர் பணியாற்றி வந்தார்.
 
இன்று காலை வழக்கம் போல அவர் பள்ளிக்கு தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து, திடீரென வழிமறித்து கத்தியால் குத்தினர்.
 
இதனை அடுத்து, அவர் உயிர் தப்பிக்க ஓடிய நிலையில், ஓட ஓட விரட்டிய மர்ம நபர்கள் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதனால் இர்பான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று, இர்பான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
 
அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா தடை விதித்த சவுதி அரேபியா: என்ன காரணம்?

அமைச்சர் நேரு மகன், சகோதரர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

மசூதி மேல் ஏறி காவிக்கொடியை பறக்கவிட்ட இந்து அமைப்பினர்.. உபியில் பரபரப்பு..!

ஆட்டம் கண்ட உலக பங்குசந்தை! ஹாயாக Vacation சென்ற ட்ரம்ப்! - பழிவாங்க சீனா எடுத்த முடிவு!

இன்று ஒரே நாளில் சுமார் 3000 புள்ளிகள் இறங்கிய சென்செக்ஸ்.. தலையில் கை வைத்த முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments