மக்களுக்கு எச்சரிக்கை! - 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (09:53 IST)
ஈரப்பதம் குறைந்த காற்று வீசுவதாலும், கடல் காற்று தாமதமாக வீசுவதாலும் மேலும் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 
இதுகுறித்து சென்னையில் வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில், “மேற்கு திசையில் இருந்து காற்று வீசவேண்டும். ஆனால் அவ்வாறு வீசப்படும் காற்றில் ஈரப்பதம் மிக குறைவாக உள்ளது. மேலும் மேகமும் இல்லை. கடல் காற்று மிக தாமதமாக இரவில்தான் வீசுகிறது.
 
இதன் காரணமாக தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த வானிலை அடுத்த 3 நாட்களுக்கு மட்டும்தான் தெரியும். அடுத்து 3 நாட்கள் கழித்து கணக்கிட்டு பார்த்துதான் அடுத்து வெப்பம் எப்படி இருக்கும் என்று கூற இயலும்” என்று தெரிவித்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்மா சட்டம் அமூல்!.. கேஸ் சிலிண்டரை பதுக்கினால் சிறை தண்டனை...

மதுரையில் 3 நாட்களில் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம்!.. அதிர்ச்சியில் மக்கள்..

சிலிண்டர் தட்டுப்பாடு!.. ஹோட்டல்கள் மூடப்படும் நிலை!.. ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

ஹோட்டல்களை மூடுவோம்!.. தமிழக ஹோட்டல் சங்கம் அறிவிப்பு!..

கேஸ் தட்டுப்பாடா? சிலிண்டர் விலை ஏறுதா? கவலையே இல்லை.. Induction Stove இருக்கவே இருக்குது.. பொதுமக்கள் கூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments