Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு...

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (19:18 IST)
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைந்த நிலையில், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு கடந்த ஜனவரி 18 ஆம் தேதி வெளியானது.

இதையடுத்து வேட்புமனுதாக்கல் கடந்த பிப்ரவரி 13 ல் தொடங்கி 7 ஆம் தேதி வரை நடந்தது.

பின்னர், காங்கிரஸ் சார்பில், ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில், தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில், மேனகா ஆகியோர் மற்றும் சுயேட்சை வேட்பாளர் என மொத்தம் 77 பேர் போடிய்யிட்டனர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், இன்று காலை  முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

மொத்தம் 2,27,547வாக்காளர்கள் உள்ள நிலையில், 52 இடங்களில் 238 வாக்குப்பதிவு மையங்களில் இன்று ஓட்டுப்பதிவு நடந்தது.

இதில், மாலை 5 மணி வரை 70.58% வாக்குப்பதிவு நடந்தது.மாலை 6 மணி நிலவரப்படி 74.69 % வாக்குகுகள் பதிவாகியுள்ளது. ஆண்கள் 82,021 ஆண்களும், பெண்கள் 87,907 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 17 பேர் வாக்களித்துள்ளனர். இதன் முடிவுகள் வரும் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments