Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி.. வீடு வீடாக சென்று இன்று முதல் தொடக்கம்..

Siva
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:20 IST)
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று முதல் நடைபெறுவதாகவும் வீடு வீடாக தேர்தல் ஆணைய அலுவலர்கள் சென்று இந்த பணியை மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடங்கும் நிலையில் அக்டோபர் 18ஆம் தேதி வரை இந்த பணி நடைபெறும் என்றும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்கு சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை முரண்பாடுகள் குறித்து அறிதல், வாக்காளர் பட்டியலில் தரமான புகைப்படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

மேலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடிந்தவுடன் அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28 வரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கும் பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இணைக்க வரும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments