Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை கேள்வி கேட்க வாக்காளர்களுக்கு உரிமையில்லை: கருணாஸ்

Webdunia
வியாழன், 23 பிப்ரவரி 2017 (16:14 IST)
எனக்கு ஓட்டுப்போடாதவர்கள் என்னை கேள்வி கேட்க உரிமையில்லை என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார். இது அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.வான கருணாஸ், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை கமிஷனரிடம் புகார் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கருணாஸ் கூறியதாவது:-
 
திருவாடனை தொகுதியில் எனக்கு எதிராக 2 லட்சம் பேர் உள்ளனர். அதில் எனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்தான். எனக்கு ஓட்டு போடாதவர்கள் என்னை கேள்வி கேட்க உரிமையில்லை.
 
நான் எதையும் நேரடியாக பேசுபவன். என்னைப்பற்றி பரவும் அவதூறை யாரும் நம்ப வேண்டாம், என கூறினார்.
 
ஏற்கனவே பொதுமக்கள் சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் கருனாஸ் எனக்கு ஓட்டு போடாதவர்கள் என்னை கேள்வி கேட்க உரிமையில்லை என கூறியது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் கருணாஸ் பற்றி மேலும் சமூக வலதளங்களில் பல்வேறு செய்திகள் வலம் வர வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments