Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபை கூடி ஒரு மணிநேரம் ஆகியும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2017 (12:02 IST)
தமிழக முதல்வராக தேந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க, தற்போது தமிழக சட்டசபை கூடியுள்ளது.


 

 
சட்டசபை கூடியதும், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்மொழிந்தார். அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணியினர் கோரிக்கை வைத்தனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கோஷமிட்டு வருகின்றனர். எனவே, சட்டசபையில் கடுமையான அமளி ஏற்பட்டுள்ளது.  
 
அப்போது பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே ஜனநாயகம் பாதுகாக்கப்படும் எனக் கூறினார். ஒன்று ரகசிய வாக்கெடுப்பு நடத்துங்கள். இல்லையேல், வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துங்கள் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், காங்கிரஸ் சட்டசபை தலைவர் ராமசாமியும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். ஆனால், வாக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பது என்னுடைய முடிவு. அதை யாரும் நிர்பந்திக்க முடியாது என தனபால் கூறியுள்ளார்.
 
எனவே, சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டுள்ள்து. இதனால், சட்டசபை கூடி ஒரு மணி நேரம் ஆகியும் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments