Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மோடியின் நிறைவேறாத ஆசை: வெளிவராத பரபரப்பு தகவல்கள்

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2015 (00:41 IST)
சென்னையில், விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டதாகவும், பின்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழகத்துக்கு அடையாறு வழியாக காமராஜர் சாலையில் காரில் வந்தார்.
 
அப்போது, விவேகானந்தர் இல்லம் அருகில் மோடியின் கார் வந்த போது அவரது காரின் வேகம் திடீரெனக் குறைக்கப்பட்டது. அந்த நிமிடம், காரில் இருந்தபடியே விவேகானந்தர் இல்லத்தைப் பார்த்து மோடி வணங்கினார்.
 
மேலும், அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விவேகானந்தர் இல்ல நிர்வாகிகள் மற்றும் பொது மக்களைப் பார்த்து நரேந்திர மோடி கையசைத்தார்.
 
இந்த நிலையில், பிரதமர் மோடி சென்னை வரும் போது விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட திட்டமிட்டதாகவும், ஆனால், பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments