Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் மோடியின் நிறைவேறாத ஆசை: வெளிவராத பரபரப்பு தகவல்கள்

சென்னையில் மோடியின் நிறைவேறாத ஆசை: வெளிவராத பரபரப்பு தகவல்கள்
, ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2015 (00:41 IST)
சென்னையில், விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டதாகவும், பின்பு, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழகத்துக்கு அடையாறு வழியாக காமராஜர் சாலையில் காரில் வந்தார்.
 
அப்போது, விவேகானந்தர் இல்லம் அருகில் மோடியின் கார் வந்த போது அவரது காரின் வேகம் திடீரெனக் குறைக்கப்பட்டது. அந்த நிமிடம், காரில் இருந்தபடியே விவேகானந்தர் இல்லத்தைப் பார்த்து மோடி வணங்கினார்.
 
மேலும், அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விவேகானந்தர் இல்ல நிர்வாகிகள் மற்றும் பொது மக்களைப் பார்த்து நரேந்திர மோடி கையசைத்தார்.
 
இந்த நிலையில், பிரதமர் மோடி சென்னை வரும் போது விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட திட்டமிட்டதாகவும், ஆனால், பாதுகாப்பு காரணங்களால் கடைசி நேரத்தில் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil