வெற்றிடத்தை நிரப்ப நானும் வருவேன்: நடிகர் விவேக்

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (23:20 IST)
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கருணாநிதியின் உடல்நலம் ஆகியவை காரணமாக தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக கமல், ரஜினி உள்பட ப்லர் கூறி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே அரசியலில் உள்ள ஸ்டாலின் , வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக்,  தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கின்றதா? இல்லையா? என்பது தமக்கு தெரியாது என்றும் அப்படி ஒருவேளை வெற்றிடம் இருப்பதாக தெரியவந்தால், அந்த வெற்றிடத்தில் மரக்கன்றுகளை நடுவேன் என்றும் அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

இன்று உலக வனநாள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவதை அடுத்து நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நகைச்சுவை நடிகர் விவேக் கலந்து கொண்டார். தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாடிய விவேக் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் வெற்றிடம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த விவேக், 'தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதா என்பதற்கு நான் கருத்து கூறமாட்டேன். ஆனால் வெற்றிடம் இருப்பதாக எனக்கு தெரிய வந்தால் உடனே அங்கு மரக்கன்றுகளை நடுவேன் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments