Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வகர்மா சமூகத்தினர் போராட்டம்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (19:00 IST)
விஸ்வகர்மா சமூகத்தின் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி – கரூரில் அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக விஸ்வகர்மா சமுதாய மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு அகில இந்திய கைவினைஞர் முன்னேற்ற கழகம் மற்றும்  தமிழக விஸ்வர்கர்மா சமுதாயம் சார்பில் அமைப்பின்  உயர்மட்ட ஆலோசனைகுழு உறுப்பினர்  பெரியசாமி ஆச்சாரியார் தலைமையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில்  தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் சண்முகம் பொது செயலாளர் விசு சிவகுமார்  அகில இந்திய தலைவர் மணிசங்கர் உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்ட இவ்வமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த பொது செயலாளர் விசு சிவகுமார் பிரதமர் மோடி செப்டம்பர் 17-ம் தேதியை விஸ்வகர்மா ஜெயந்தி தினமாக அறிவித்து அன்றைய தினம்  விடுமுறை அளித்துள்ளார். இதனை அனைத்து மாநில முதல்வர்களும் அறிவித்து கடைபிடிக்க கூடிய சூழலில் தமிழகத்தில் மட்டும் தமிழக அரசு அறிவிக்காதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என்றும் அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்களது போராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும் என எச்சரிக்கையாகவே தெரிவித்துகொள்கிறோம் என்றார்.

மேலும் கைவினைஞர் நல வாரியம் பொற்கொல்லர் வாரியங்களையும் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் அதே போல் 411 -சட்டத்தால் பொற்கொல்லர் மற்றும் நகை வியாபாரிகளை கொடுமைபடுத்தும் காவல் துறையினரால் தொழில்கள் பாதிக்கும் நிலமை ஏற்பட்டு உள்ளது.எனவே அதற்க்கான சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.


சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments