Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் ஒரே வரிசையில் தீபா, விஷால்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (16:41 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நடிகர் விஷாலும், தீபாவும் ஒரே வரிசையில் நின்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மனுதாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.
 
சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால் மற்றும் தீபா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். விஐபி என்று பாராமல் விஷால் மனு தாக்கல் செய்ய வரிசையில்தான் வர வேண்டும் என மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஷால் மற்றும் தீபா வரிசையில் நின்றுதான் மனு தாக்கல் செய்தனர்.
 
வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் நடிகர் விஷாலுக்கு 68ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது. தீபாவுக்கு 91ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments