Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் ஒரே வரிசையில் தீபா, விஷால்

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2017 (16:41 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நடிகர் விஷாலும், தீபாவும் ஒரே வரிசையில் நின்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று மனுதாக்கல் செய்ய ஏராளமானோர் குவிந்தனர்.
 
சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால் மற்றும் தீபா ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். விஐபி என்று பாராமல் விஷால் மனு தாக்கல் செய்ய வரிசையில்தான் வர வேண்டும் என மற்ற சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விஷால் மற்றும் தீபா வரிசையில் நின்றுதான் மனு தாக்கல் செய்தனர்.
 
வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் நடிகர் விஷாலுக்கு 68ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது. தீபாவுக்கு 91ஆம் எண் டோக்கன் தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments