Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: தம்பிதுரை தகவல்

Siva
திங்கள், 13 ஜனவரி 2025 (07:52 IST)
டங்க்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க இருப்பதாக அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.

மதுரையில் டங்க்ஸ்டன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக பாராளுமன்றத்தில் கனிமவள மசோதாவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரித்து பேசியதாக திமுகவினர் கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட முதல்வர் ஸ்டாலின் அதை தெரிவித்த போது அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் இது குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை கூறிய போது டங்க்ஸ்டன் சுரங்க விவகாரம் வர நான் தான் காரணம் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை முழுமையாக மறுக்கிறேன். தமிழக சட்டசபையில் உறுப்பினர் அல்லாத என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். எனவே அவர் மீது பாராளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments