Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 நாட்களாக சோறு, தண்ணியில்லை; பசியால் மடிந்த சிறுவன்! – விழுப்புரத்தில் சோகம்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (09:19 IST)
விழுப்புரத்தில் சில நாட்கள் முன்னதாக தள்ளுவண்டியில் இறந்து கிடந்த சிறுவன் பசியால் இறந்ததாக தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் வடக்கு தெருவில் சலவை தொழிலாளி சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான தள்ளுவண்டியில் கடந்த 15ம் தேதி 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனை யாராவது கொன்று தள்ளுவண்டியில் போட்டார்களா என்பது குறித்து சிறுவனின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் சிறுவன் இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் எதுவும் கிடைக்காமல் பசியில் இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவன் குறித்து போலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments