Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் திடீர் மாற்றம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..!

Mahendran
செவ்வாய், 11 ஜூன் 2024 (12:46 IST)
விழுப்புரம் தெற்கு மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் செய்தி கே மஸ்தான் அவர்களை பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக சேகர் அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 
 
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
அதேபோல் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த புகழேந்தி அவர்கள் மறைவெய்திய காரணத்தால் கழக பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் கௌதம் சிகாமணி அவர்கள் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
 
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments