Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (14:14 IST)
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
விழுப்புரம் அருகே இயங்கி வந்த அன்பு ஜோதி என்ற ஆசிரமத்தில் ஆதரவற்றோர் மாற்றுத்திறனாளிகள் தங்க வைக்கப்பட்டு பராமரித்து வருவதாகவும் அவர்களுக்கு பாலியல் தொல்லை உள்ளிட்ட முறைகேடுகள் நடந்து வருவதாகவும் புகார் எழுந்தது. 
 
மேலும் திருப்பூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் திடீரென காணவில்லை என அவரது மகன் கொடுத்த புகார் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் சமீபத்தில் அன்புஜோதி ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டு எட்டு பேர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜேபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்