Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளாஸ்டிக் தடைக்கு நாங்கள் எதிரி இல்லை.. ஆனால்? - விக்கிரமராஜா பேட்டி (வீடியோ)

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (17:38 IST)
கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் பசுபதி டிரேடர்ஸ் என்ற வணிக நிறுவனத்தினை திறந்து வைக்க வருகை தந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். 

 
அப்போது., சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டினை அனுமதிக்க மாட்டோம்.வருவது கண்டிக்கத்தக்கது. பிளாஸ்டிக் கேரி பேக் வரும் ஜனவரி 1 முதல் தடை என்று அறிவித்துள்ளார்கள். ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், கேரி பேக் என்பது ஒரு தவறான பொருளை வைத்து விற்பது போல கருதி, வணிகர்களை தொல்லை செய்து, கடைகளில் இருந்து பறிமுதல் செய்கின்றனர். முதல்வர் உத்திரவினையும் மீறுவது போல, ஒரு சில ஆட்சியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
 
ஆகையால் அதை கண்டித்து நாள மறுநாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்த விக்கிரமராஜா, ஜனவரி மாதம் 1 ம் தேதி ஒன்று தான் ஒரு மாநில முதல்வரே, அறிவித்துள்ள நிலையில், ஒரு சில மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியாளர்கள் குழப்ப நிலையை நீடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். 
 
பேட்டி : ஏ.எம்.விக்கிரமராஜா – தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு – மாநிலத்தலைவர் 
-சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments