Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிரிகளுக்கு சவுக்கடி...முகத்திரையை கிழிக்கணும் ...கேப்டன் ஸ்டைலில் விளாசும் விஜய பிரபாகரன்

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (15:27 IST)
தஞ்சாவூரில் மற்றும் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்  நேற்று மாலை தஞ்சாவூர் சென்றார். அங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு இறகுப் பந்து போட்டியை தொடங்கிவைத்தார்.
அதன்பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 
கடந்த காலங்களில் 58 % அளவுக்கே காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் நடைபெற்றது.  ஆனால் இப்போது 7 % அளவுக்கே விவசாயம் நடைபெற்றது. காவிரி நீர் வராததால் 51 % சதவீதம் விவசாயம் செய்ய முடியாமல் போனது.
 
காவிரியில் தண்ணீர் வர வேண்டுமானால் விஜயகாந்த ஆட்சிக்கு வர வேண்டும்.தேமுதிகவுக்கு 2 % ஓட்டு வங்கிதான் உள்ளது என்பவர்கள் எதற்காக எங்கள் வீட்டு வாசலில் கூட்டணிக்காக  நிற்க வேண்டும். எங்களிடம் கூட்டணி வைக்க வருகிறார்கள்..? தற்போது  டெல்லியில் குரல் கொடுக்க சரியான தலைவர் இல்லை. இப்போது உள்ள தலைவர்களில் தப்பு பண்ணாத தலைவராக விஜயகாந்த் மட்டுமே உள்ளார்.
மேலும் விஜய காந்த் மீது எந்தக் குற்றமும் கூற முடியாது. எதிரிகளுக்கு சவுக்கடி கொடுத்து அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும். எனக்கும் அப்பாவுக்கும் தஞ்சாவூர் தொகுதியில் தனி பாசம் உண்டு.. இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments