Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை - சர்ச்சையில் சிக்கிய காஞ்சி விஜயேந்திரர்

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (11:35 IST)
சென்னையில் நடந்த ஒரு விழாவில் தமிழ்தாய் வாழ்த்து பாடிய போது, காஞ்சி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார். விழாவின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது, ஆளுநர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். ஆனால், இந்த விழாவில் கலந்து கொண்ட காஞ்சி இளைய மடாதிபதி விஜேயேந்திர சரஸ்வதி மட்டும் எழுந்து நிற்காமல் தனது இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

ஆனால், விழா முடிந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்த செயல் அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதன் மூலம் அவர் தமிழை அவமரியாதை செய்து விட்டார் எனவும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஆண்டாள் விவகாரத்தை கையில் எடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என போர்க்கொடி பிடித்த ஹெச்.ராஜா மற்றும் இந்து அமைப்பினர் விஜேந்திரரை மன்னிப்பு கேட்ப சொல்வார்களா? எனவும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments