Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மது குடிப்பவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு விட்டுவரும் வேலையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது: விஜயகாந்த்

மது குடிப்பவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு விட்டுவரும் வேலையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது: விஜயகாந்த்
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (12:05 IST)
மதுகுடிப்பவர்களை பாதுகாப்பாக வீட்டிற்க்கு விட்டுவரும் வேலையில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

திருச்சி தாபேட்டையில்  தேமுதிக சார்பில் சிறை கைதிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்துனராக பங்கேற்று பேசிய   விஜயகாந்த், தமிழகத்தில்  பள்ளிக் கூடங்களை விட டாஸ்மாக் கடைகளே அதிக அளவில் இருக்கிறது, டாஸ்மாக் கடைகளுக்கு தற்போது தமிழக காவல்துறை பாதுகாப்பு அளித்து வருகிறது .சட்டம் ஒழுங்கை காக்கவேண்டிய தமிழக காவல்துறை டாஸ்மாக காவல் துறையாக மாறிவிட்டது. பாதுகாப்பு அளித்து வரும் போலீஸ் பொதுமக்களை மது குடிக்க வலியுறுத்தி வருவதாகவும்.சில போலீஸார் மதுகுடிப்பவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு விட்டுவரும் வேலையில் ஈடுபட்டு வருகிறது என்று விஜயகாந்த கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil