Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியுடன் சிங்கப்பூருக்குச் சென்றார் விஜயகாந்த்

மனைவியுடன் சிங்கப்பூருக்குச் சென்றார் விஜயகாந்த்
, திங்கள், 4 மே 2015 (13:24 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலாவுடன்  சிங்கப்பூருக்குச் சென்றார்.


 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்றார். தனது மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக நடித்த 'சகாப்தம்’'படப்பிடிப்பு பணிகளை கவனித்தார். அப்போது அவர் மருத்துவ பரிசோதனைகளும் செய்து கொண்டதாகவும், சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் இருந்து 2 மாதத்துக்குப் பின்னர் விஜயகாந்த் தமிழகம் திரும்பினார். சமீபத்தில் மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். 
 
பின்னர், எதிர்க்கட்சி பிரதிநிதிகளை தனது தலைமையில் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்தித்து கர்நாடகம் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி மனு கொடுத்தார்.
 
இந்நிலையில் விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil