Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது உடல்நிலை சீராக இருப்பதற்கு யோகாசனம் முக்கிய காரணமாகும் - விஜயகாந்த்

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2015 (11:27 IST)
தனது உடல்நிலை சீராக இருப்பதற்கு யோகாசனம் முக்கிய காரணமாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியா உள்ளிட்ட 192 நாடுகளில் இன்று யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களிலும் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா மற்றும் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.
 
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
எனது உடல்நிலை சீராக இருப்பதற்கு யோகாசனம் முக்கிய காரணமாகும். இன்று யோகா தினம் கடைபிடிக்கின்றோம்.
 
இந்த நாள் முக்கியமான நாளாகும். ஐ.நா. மன்றம் யோகாவை அங்கீகரித்தது பெரிய விஷயமாகும். கட்சிக்காரர்களும் நலமுடன் வாழ யோகா கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் யோகா நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments