Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவையில் யோகா செய்யும் கேப்டன்

கோவையில் யோகா செய்யும் கேப்டன்
, திங்கள், 9 நவம்பர் 2015 (04:05 IST)
கோவை அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறப்பு யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லை என கூறப்படுகிறது. இதற்காக அவர் டாக்டர்கள் சிலரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை விஜயகாந்த் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
 
இந்த நிலையில், கோவை அருகே அருகே உள்ள வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், தேமுதிக தலைவர் விஜகாந்த் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் யோகா பயிற்சி பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
 
ஈஷா யோகா மையத்தில் பயிற்சி பெற்ற தனது மகனை காண வந்த விஜயகாந்த், சனிக்கிழமை அன்று சென்று பார்த்து சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, அவரும் சிறப்பு யோகா பயிற்சியல் விரும்பி சேர்ந்து பயிற்சி பெறுவதாக கூறப்படுகிறது. அங்கு அவர் ஒரு வார காலம் பயிற்சியில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
ஆனால், இந்த தகவலை ஈஷா யோகா மையமோ அல்லது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 
 

Share this Story:

Follow Webdunia tamil