Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிபெருமாள் குடும்பத்துக்கு விஜயகாந்த் ரூ.1 லட்சம் நிதி

சசிபெருமாள் குடும்பத்துக்கு விஜயகாந்த் ரூ.1 லட்சம் நிதி
, சனி, 1 ஆகஸ்ட் 2015 (21:19 IST)
காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
 
இது குறித்து இன்று விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்ல் கூறியிருப்பதாவது, காந்தியவாதி சசிபெருமாள் மறைவு, அவரது குடும்பத்துக்கு மட்டுமின்றி, தமிழகத்துக்கே மிகப்பெரிய இழப்பாகும். எவ்வித நிவாரணம் வழங்கினாலும், அதை ஈடுகட்ட இயலாது. ஆனாலும், அவரை இழந்து வாடும் குடும்பத்துக்கு இப்போதைய தேவைக்கான உதவியாக ரூ.1 லட்சம் வழங்குகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் நிதியுதவி மட்டுமே அவரது குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்காது. தமிகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவது மட்டுமே அவருக்கு செலுத்தக் கூடிய உண்மையான அஞ்சலி என தனது அறிவிப்பில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil