Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி செய்தியாளர் சந்திப்பில் படுகோபத்தில் விஜயகாந்த்

டெல்லி செய்தியாளர் சந்திப்பில் படுகோபத்தில் விஜயகாந்த்
, திங்கள், 27 ஏப்ரல் 2015 (17:15 IST)
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து டெல்லி சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர்.
 
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. ஆரம்பத்தில் அமைதியான முறையிலேயே செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்கள் கேள்விகளுக்கு விஜயகந்த் பதிலளித்துகொண்டிருந்தார்.
 
அப்போது பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் கேள்விகளை கேட்டார். இதனால் திடீரென்று கோபமடைந்த விஜயகாந்த், உங்களுக்கு கொம்பா முளைச்சிருக்கு என்று கூறினார். ஆனாலும் மீண்டும் விடாப்பிடியாக் அந்த நிருபர் கேள்விகளை கேட்க, நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே என்றும், சொன்னதை கேட்கா விட்டால் மைக்கை தூக்கி அடித்து விடுவேன் என்றார். அருகில் அமர்ந்திருந்த திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா அவரை சமாதானப்படுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர் ஏதோ கேட்க, கோபமடைந்த விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பிலிருந்து எழுந்து சென்றார். பலர் அவரை சமாதானப்படுத்தி அமரச் செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil