Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த்

Webdunia
வெள்ளி, 19 டிசம்பர் 2014 (15:35 IST)
தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 
 
சென்னை மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக, கழிவுநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளன. இந்த ஆட்சியில், 2 சதவிகிதம் மட்டுமே சாலைகள் மழையால் சேதமடைந்து உள்ளதாக அமைச்சர் சட்டமன்றத்தில் சொல்கிறார். ஆனால் சேதமடைந்த சாலைகள் இன்னும் அதிக அளவில் உள்ளது என்றும், ஒப்பந்ததாரர்கள் சரியான முறையில் சாலை பணிகளை செய்யவில்லை என்றும், தரமற்ற முறையில் சாலைப்பணிகள் செய்ததால் தான் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் சாலைகள் பலத்த சேதம் அடைந்துள்ளன என்றும் பொது மக்கள் பலரும் பேசுகின்றனர். 
 
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிலோ மீட்டர் சாலைகள் சேதம் அடைந்து உள்ள நிலையில், சாலைகளை சீரமைக்க ரூ.60 கோடி மட்டும் ஒதுக்கினால் எப்படி அனைத்து சாலைகளையும் சீரமைக்கமுடியும். எனவே தமிழகத்தின் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments