Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜயகாந்த் சக்கர நாற்காலியில், முகத்தை மூடி சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தார்

விஜயகாந்த் சக்கர நாற்காலியில், முகத்தை மூடி சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தார்
, திங்கள், 28 ஜூலை 2014 (13:04 IST)
சிங்கப்பூரில் இருந்து விஜயகாந்த் சென்னை திரும்பி வந்தார். அவர் முகத்தை துணியால் மூடியபடி சக்கர நாற்காலியில் வந்து காரில் ஏறிச்சென்றார்.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது மனைவி பிரேமலதாவுடன் கடந்த 13 ஆம் தேதி சிங்கப்பூருக்கு பயணம் சென்றார். அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர் சிங்கப்பூர் சென்றதாக கூறப்பட்டது.
 
ஆனால் தனது மகன் நடிக்கும் படத்துக்கான வேலைகளை கவனிக்கவே விஜயகாந்த், சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.
 
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை 10.10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் விஜயகாந்த் தனது மனைவியுடன் வந்தார். முதலில் பிரேமலதா மட்டும் தனியாக ஒரு காரில் ஏறிச் சென்று விட்டார்.
 
அதன்பிறகு விஜயகாந்தை விமான நிலைய ஊழியர்கள், சக்கர நாற்காலியில் அமர வைத்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் காரில் ஏறி விஜயகாந்த் புறப்பட்டு சென்றார்.
 
“சக்கர நாற்காலியில் வந்தபோது விஜயகாந்த் தனது முகத்தை துணியால் மூடியபடி வந்தார். இதனால் அவர் யார்? என்று எங்களுக்கு தெரியவில்லை. காரில் ஏறிய போது முகத்தில் இருந்த துணி விலகியபோதுதான் அது விஜயகாந்த் என்பது எங்களுக்கு தெரிந்தது” என விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
 
சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை முடித்துக்கொண்டு சென்னைக்கு திரும்பியதால்தான் அவர் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil